சென்னையில் பயங்கர கனமழை !

4 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்

தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.சென்னையிலும் ஒரு வாரமாக மழை பெய்து வருகிறது.ஜூலை மாதத்தில் அதிக அளவு மழை பதிவாகியுள்ளது.

தொடர் மழை காரணமாக சென்னையில் பதிவாகும் மழை அளவு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.ஜூலை 1ஆம் தேதி முதல் நேற்று முன்தினம் வரை நுங்கம்பாக்கம் வானிலை ஆய்வு மையத்தில் 220.5 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருக்கிறது.

மேலும் சென்னை வழக்கத்தை விட 50 சதவீதம் கூடுதல் மழை பெய்துள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.13 ஆண்டுகளுக்கு முன்பு அதாவது 2007ஆம் ஆண்டு ஜூலை மாதம் சென்னையில் 243.9 மி.மீ.மழை பதிவாகி இருந்தது என்று தெரியவந்துள்ளது.