சென்னை அண்ணா சாலையில் நடந்த தீ விபத்து !

சென்னை அண்ணாசாலையில் சாந்தி தியேட்டர் அருகே உள்ள அடுக்குமாடி வணிக வளாகம் ஒன்றில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டுள்ளது.வணிக வளாகத்தில் 4 வது மாடியில் உள்ள கம்ப்யூட்டர் நிறுவனம் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த தகவல் அறிந்து அங்கு வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.மேலும் விபத்தில் சிக்கியவர்களையும் மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த கட்டிடத்தில் 20-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இருக்கின்றன.இந்த விபத்து காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து தற்போது நிறுத்தப்பட்டுள்ளது.மேலும் அங்குள்ள ஊழியர்கள் ராட்சத கிரேன் மூலம் ஜன்னல்கள் வழியாக மீட்கப்பட்டு வருகின்றனர்.