பூண்டை அதிகம் உணவில் சேர்த்து கொள்ளுங்கள் !

எல்லோருக்கும் ஆரோக்கியமாக வாழ்வது மிகவும் பிடிக்கும்.ஆனால் அதற்கு நாம் முயற்சி எடுக்க வேண்டும்.ஆரோக்கிய வாழ்விற்கு உணவு மிக அவசியம்.பூண்டில் அதிகளவு தாதுக்களும், வைட்டமின்களும் அயோடின், சல்பர், குளோரின் போன்ற சத்துக்களும் இருக்கின்றன.

பச்சையாக சாப்பிட்டால், உடல் எடை குறையும். அதுமட்டுமின்றி, உடலின் நோயெதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும்.நீரிழிவு நோயை தடுக்க அல்லது அதை எதிர்த்து போராட, சமைக்கப்படாத 2-3 பூண்டுப்பற்களை உட்கொள்ளலாம்.

உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு பூண்டுச்சாறு கொடுத்ததில் இரத்த அழுத்த மாத்திரைகளுக்கு நிகரான அளவு இரத்த அழுத்தம் குறைந்துள்ளது கண்டறியப் பட்டுள்ளது.

பூண்டு, உடலின் கொலஸ்ட்ரால், கொழுப்பு, ட்ரைகிளிஸெரைட் சீரம், பிளேட்லெட் திரட்டல் போன்றவற்றை குறைத்து – ஆன்டி ஆக்சிடென்ட் செயல்பாடுகளை அதிகரிக்க உதவுகிறது.