இன்று சட்டசபையின் முதல் கூட்டத்தொடர் – தமிழகம் !

தமிழகத்தில் ஏப்ரல் 6 ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது.நடந்த சட்டசபை தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்று கடந்த 7-ந்தேதி கவர்னர் மாளிகையில் மு.க.ஸ்டாலின் முதல்வராக பதவி ஏற்றார்.

இதனை தொடர்ந்து தமிழக சட்டசபையின் முதல் கூட்டம் சென்னையில் உள்ள கலைவாணர் அரங்கில் இன்று நடைபெறுகிறது.இதில் புதிய எம்.எல்.ஏ.க்கள் பதவி ஏற்கிறார்கள்.

இந்த சட்டசபை கூட்டத்தில் கு.பிச்சாண்டி முன்னிலையில் புதிய எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்று கொள்கின்றனர். இதைத் தொடர்ந்து நாளை சபாநாயகர், துணை சபாநாயகர் தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர்.

இன்று காலை 10 மணி அளவில் சட்டசபை கூடுகிறது.மேலும் அனைத்து கட்சியினருக்கும் இதற்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.