புதிய மதுரை ஆதீனமாக ஹரிஹரர் தேசிகர் !

மதுரை ஆதீன மடத்தின் 292-வது ஆதீனமான அருணகிரிநாதர்(77) சுவாச பிரச்சனை காரணமாக உடல் நலம் பாதிக்கப்பட்டு கடந்த 9ஆம் தேதி மதுரையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அனுமதிக்கப்பட்டதிலிருந்தே உடல் நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லாததாக கூறப்படுகிறது.இந்நிலையில் அவர் நேற்று இரவு காலமானார்.

அவரது உடல் ஆம்புலன்ஸ் மூலமாக நேற்று நள்ளிரவு மதுரையில் உள்ள ஆதீன மடத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.அவரது உடல் ஆதீனத்திற்கு சொந்தமான இடத்தில் அடக்கம் செய்யப்பட உள்ளது.

இந்நிலையில்,அருணகிரிநாதர் மறைவை தொடர்ந்து 293வது மடாதிபதியாக ஹரிஹரர் தேசிகர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.