சில்கி கூந்தல் வேண்டுமா !

பெண்கள் அனைவர்க்கும் பட்டு போன்று கூந்தல் வேண்டும் என்ற ஆசை இருக்கும்.எந்த வகையான கூந்தல் வேண்டுமானாலும் இருக்கலாம் சுருள் முடி,மெலிந்த முடி,வறட்சியான முடி எப்படி இருந்தாலும் சில்கியாக இருந்தால் அனைவரும் விரும்புவர்.எந்த விதமான செயற்கை கண்டிஷனர் வகைகள் போடாமல் இயற்கையாகவே நம்முடைய கூந்தல் பட்டுப்போல் செய்ய வீட்டில் இருக்கும் இந்த பொருட்களே போதுமானது.

மருதாணி இலை மற்றும் வேப்பிலை நன்கு அரைத்து தலையில் பேக் போட்டு கொள்ளவும்.பிறகு 20 நிமிடம் கழித்து தலை குளித்து விடவும்.இப்படி செய்தல் கூந்தல் சில்கி ஆவதோடு பொடுகு பிரச்சனையும் சரி ஆகும்.

வாழைப்பழத்தை தோல் உரித்து மிக்ஸியில் அடிக்கவும் தேங்காய்ப்பாலை ஊற்றி அரைக்கவும் அதில் கொஞ்சம் பாதாம் எண்ணெயை ஒரு டீஸ்பூன் அளவு சேர்க்கவும் அற்புதமான சூப்பர் ஹேர் பேக் நம் கூந்தலுக்கு ரெடி.

வாரம் ஒருமுறை கூந்தலுக்கு பயத்தம் மாவு மற்றும் தயிர் இரண்டையும் சம அளவில் எடுத்துக் கொண்டு பேஸ்ட் செய்து கூந்தலில் பேக் போட்டு குளிக்கவும்.இது ஒரு சிறந்த கண்டிஷனர்.