கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் – அமெரிக்கா அதிபர் !

உலக அளவில் அதிகளவிலான கோவிட்-19 பாதிப்பு அமெரிக்காவில் ஏற்பட்டுள்ளது.கோவிட்-19 தடுப்பூசிக்கு அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது.துணை அதிபரான மைக் பென்ஸ், அவரது மனைவி, அந்நாட்டின் பிரதிநிதி சபைகளின் சபாநாயர் நான்சி பெலோசி, செனட் சபையின் தலைவர் மிட்ச் மெக்கோனெல் ஆகியோருக்கு கோவிட்-19 தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் அடுத்த அதிபராக பொறுப்பேற்கவுள்ள ஜோ பிடன், அவரது மனைவி ஆகியோர் நாளை தடுப்பூசி செலுத்திக் கொள்ள இருப்பதாக அவரது ஊடக செயலர் தெரிவித்துள்ளார். துணை அதிபராக பொறுப்பேற்கவுள்ள கமலா ஹாரிஸுக்கும் அடுத்த வாரத்தில் தடுப்பூசி செலுத்தப்படும் எனக் கூறப்படுகிறது.