தேர்தல் நெருங்கும் நேரம் ,பணப் பரிவர்த்தனை செயலிகள் கண்காணிப்பு !

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் மிக விரைவில் நடைபெறவுள்ளது.இந்நிலையில் தேர்தல் ஆணையம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது.இந்நிலையில்,ஆன்லைன் பண பரிமாற்ற செயலியான கூகுள் பே, போன் பே மூலம் வாக்காளர்களுக்கு பண விநியோகத்தை தடுக்க அந்த செயலிகள் பரிவர்த்தனைகள் கண்காணிக்கப்படுவதாக அறிவித்துள்ளார்.

இதற்கு முன்பு வங்கி அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.அதில் பயன்படுத்தாத வங்கி கணக்கில் திடீர் பண பரிவர்த்தனை நடந்தால் தேர்தல் ஆணையத்துக்கு உடனடியாக அந்த தகவலை தெரியப்படுத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

தேர்தல் நெருங்கும் வேலையில் கூகுள் பே, போன் பே மூலம் வாக்காளர்களுக்கு பண விநியோகத்தை தடுக்க இந்த செயலிகள் மற்றும் வங்கி கணக்குகள் கண்காணிக்கப்படுவதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹு அறிவித்துள்ளார்.