உலக பிரபலம் ஆகிறார் தமிழிசை சௌந்தராஜன் !

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு அமெரிக்க நாட்டிலுள்ள பல்வேறு முன்னேற்ற கூட்டமைப்பு சார்பில் உலக அளவில் ஆளுமையிலும், மக்கள் சேவையிலும் சிறந்து விளங்கும் முன்னணி பெண் தலைவர்களை தேர்ந்தெடுத்து விருதுகளை வழங்கிவருகின்றனர்.

இந்நிலையில் தெலங்கானா மற்றும் புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.மேலும் வருகிற 7-ந் தேதி சிகாகோ இலியானாஸ் நகரில் நடைபெறும் 9-வது ஆண்டு மகளிர் தின விழாவில் அமெரிக்க எம்.பி டேனி கே.டேவிஸ் காணொலி காட்சி மூலம் விருதுகளை வழங்கவுள்ளார்.

இதில் அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ்,தெலுங்கானா மற்றும் புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனுக்கும் உள்பட மேலும் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் 20 பெண்களுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.