கொடூரம் !தந்தையே மகளுக்கு எமன் ஆனா சம்பவம் !

உத்தரப் பிரதேசத்தில் உள்ள ஹர்டேய் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சர்வேஷ் குமார். இவருடைய 17 வயது மகள் வாலிபரை ஒருவரை காதலித்து வந்துள்ளார். இந்த காதல் தந்தைக்கு பிடிக்கவில்லை எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

ஆனால் அவருடைய மகள் அவரது பேச்சை கேட்காமல் தொடர்ந்து அந்த வாலிபரை காதலித்துவந்துள்ளார்.இதனால் கோபமடைந்த சர்வேஷ் குமார் வீட்டில் மனைவி உள்ளிட்ட குடும்பத்தினர் இல்லாத நேரமாக பார்த்து மகளை கடுமையாக தாக்கியுள்ளார்.

மேலும் அவரது தலையை தனியாக வெட்டியுள்ளார்.அதை தொடர்ந்து மகளின் தலையை கையில் பிடித்தபடி சாலையில் நடந்து சென்றார்.இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக போலீசாரிடம் தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இளம்பெண்ணின் தலையை சர்வேஷ் குமாரிடம் இருந்து கைப்பற்றினர்.

மேலும் அவரை கைது செய்துள்ள போலீசார், இந்த விவகாரம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அவருடைய மற்ற குடும்பத்தினரையும் விசாரிக்க காவல்துறை முடிவு செய்துள்ளது.