மத்திய அரசு ட்விட்டர் நிறுவனத்தை எச்சரித்துள்ளது !

விவசாயிகள் போராட்டம் குறித்து அரசின் மீது அவதூறு பரப்பும் கருத்துக்களையும் மற்றும் கணக்குகளையும் நீக்காதது குறித்து மத்திய அரசு ட்விட்டர் நிறுவனத்தை எச்சரித்துள்ளது.

மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் போராடி வருகின்றனர்.இந்த நிலையில் அரசை கடுமையாக தாக்கி ட்விட்டரில் போடும் பதிவுகள் வெகுவாக பரவி வருகின்றன.மேலும் சில பதிவில் வதந்திகள் மற்றும் அரசின் மீது அவதூறு விமர்சனங்களும் பதிவாகிறது.

அவ்வாறு அவதூறு பரப்பும் கணக்குகளை நீக்க ட்விட்டர் நிறுவனத்துக்கு மத்திய தகவல் தொழில்நுட்ப துறை அறிவுறித்திருந்தது.ஆனால் ட்விட்டர் அந்த பதிவுகளை நீக்க வில்லை.இதனால் மத்திய அரசு ட்விட்டர் நிறுவனத்தின் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கூறியுள்ளது.