மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களை மத்திய குழு இன்று ஆய்வு

தமிழகத்தில் ஜனவரியில் பெய்த மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களை மத்திய குழுவினர் இன்று ஆய்வு செய்கின்றனர். மத்திய குழு 2 குழுக்களாக பிரிந்து தமிழகத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களை ஆய்வு செய்து மதிப்பிடுகிறது.

ஒரு குழு விருதுநகர், நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கையில் இன்று, நாளை ஆய்வு மேற்கொள்கிறது.

மற்றொரு குழு புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூரில் இன்று, நாளை ஆய்வு செய்கிறது.