மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 28 % ஆக உயர்வு !

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 17 சதவீதத்தில் இருந்து 28 சதவீதமாக உயர்த்தி வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் தந்துள்ளது.

கொரோனா தொற்று காரணமாக மத்திய அரசு ஊழியர்களுக்கு ஓராண்டுக்கும் மேலாக அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்படாமல் இருந்தது.இந்நிலையில்,நேற்று மத்திய அமைச்சரவை பிரதமர் மோடி இல்லத்தில் கூடியது.

இந்த கூட்டத்தில்,பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன், புதிதாக நியமிக்கப்பட்ட அமைச்சர்கள் பங்கேற்றனர்.

இந்தக்கூட்டத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 17 சதவீதத்தில் இருந்து 28 சதவீதமாக உயர்த்தி வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் தந்துள்ளது.மேலும் ஜூலை 1 முதல் முன்தேதியிட்டு வழங்கவும் ஒப்புதல் அளித்துள்ளது.