பொறியியல் முதலாமாண்டு வகுப்புகள் அக்டோபர் 25 முதல் தொடக்கம் !

கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த மாநில அரசு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை அறிவித்துள்ளது.இந்நிலையில்,தொழில்நுட்பக் கல்லூரிகளில் முதலாமாண்டு தவிர்த்து பிற வகுப்புகளுக்கு அக்டோபர் 1 முதல் வகுப்புகள் தொடங்கவுள்ளன.

பொறியியல் முதலாமாண்டு வகுப்புகள் அக்.25 முதல் தொடங்குகின்றன என ஏஐசிடிஇ அறிவித்துள்ளது.

கொரோனா தொற்று காரணமாக இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை தள்ளிப் போயுள்ளது.இதனால் புதிய கல்வி ஆண்டுக்கான கால அட்டவணையை ஏஐசிடிஇ திருத்தி வெளியிட்ட நிலையில், தற்போது மீண்டும் புதிய கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

2021- 22ஆம் கல்வியாண்டில் மாணவர்களுக்கான முதல்கட்டக் கலந்தாய்வு செப்டம்பர் 30-ம் தேதி முடிவுபெறும். தொழில்நுட்பக் கல்லூரிகளுக்கு அக்டோபர் 1 முதல் வகுப்புகள் தொடங்கும்.

முதலாம் ஆண்டு தொழில்நுட்பப் படிப்புகளுக்கான வகுப்புகள் அக்டோபர் 25-ம் தேதி தொடங்குகின்றன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.