கிழக்கு தைவானில் பயங்கர நிலநடுக்கம் !

கிழக்கு தைவானில் நேற்று காலை கிழக்கு கடற்கரையில் 20 க்கும் மேற்பட்ட பூகம்பங்கள் ஏற்பட்டன.ஹூலியன் கவுண்டி நகரத்தில் தொடர்ச்சியாக 2 மணி நேரங்களுக்கு நிலநடுக்கங்கள் பதிவாகின.

முதல் நிலநடுக்கம், 5.2 அளவுடன் பதிவாகியது.மற்ற நிலநடுக்கங்கள் 3 முதல் 5 வரை பதிவாகியுள்ளன.

கடந்த வாரம், தைவான் கடற்கரையில் நிலநடுக்கம் ஏற்பட்டது, இது தலைநகர் தைபேயில் உள்ள கட்டிடங்களை உலுக்கியது.இந்த நிலநடுக்கத்தில் எந்தவிதமான உயிரிழப்புகளும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.