தரிசியுங்கள் விட்டல் ருக்மணியை !

வடமாநிலத்தில் பண்டரிபுரத்தில் உள்ள ஸ்ரீபாண்டுரங்கனின் கோவிலை போன்று அனைத்து பக்தர்களும் கோவில் கர்ப்பகிரகத்தினுள் சென்று பகவானை தரிசிக்க வேண்டும் என்று ஜாதி, மதம் போன்ற எந்த வேறுபாடு இல்லாமல் ஸ்ரீஸ்ரீவிட்டல்தாஸ் மகராஜ் கோவிந்தபுரத்தில் பலகோடி மதிப்பில் கோவில் அமைத்துள்ளார். பண்டரிபுரத்திலிருந்து வந்தருளிய பாண்டுரங்கனும், ருக்மணியும் அருள்பாலிக்கின்றனர்.

எங்கும் பார்க்கமுடியாத வகையில் பைபர் கிளாஸில் சீலிங் மோல்டு டெக்கரேஷன் செய்துள்ளனர். 100 கோடி விட்டல் நாமங்களை கீழே உள்ள அறையில் வைத்து அதன் மேலே மூலவர் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது சிறப்பு ஆகும்.

ஆலயம் பார்க்க பளிங்கு கற்களால் செய்யப்பட்டது போல் இருக்கும்.அதற்கு நடுவில் பாண்டுரங்கனும், ருக்மணியும் அழகாய் காட்சியளிப்பார்.மேலும் இந்த ஆலயத்தில் கோ சாலை ஒன்று உள்ளது .அதில் பல நூறு பசுக்கள் இனம் பராமரித்து கோ சாலை சிறப்பாக நடந்து வருகிறது.மயிலாடுதுறை மற்றும் கும்பகோணம் பக்கம் சென்றால் தவறாமல் தரிசித்து வாருங்கள்.

அமைவிடம்

கும்பகோணத்திருந்து மயிலாடுதுறை செல்லும் வழியில் கோவிந்தபுரம் என்ற ஊரில் இத்தலம் இருக்கிறது.