கிலோ கணக்கில் தங்கம் பறிமுதல் – சேலம் !

சேலம் – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் தலைவாசல் அருகே பெரியேரி என்ற இடத்தில் தேர்தல் பறக்கும் படை அலுவலர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அந்த வழியே வந்த வாகனம் ஒன்றை நிறுத்தி சோதனை செய்தனர். சோதனையின் போது வாகனத்தில் 36 கோடி மதிப்பிலான 234 கிலோ தங்க ஆபரணங்கள் இருப்பது தெரியவந்தது.

மேலும் அது அந்த நகைகள் தனியார் நகைக்கடைகளுக்கு விநியோகம் செய்வதற்காக மொத்தமாக எடுத்துச் செல்லப்படுகிறது என்று கூறினர்.

மேலும் ,அந்த நகைகள் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன்னிலையில் கணக்கெடுக்கப்பட்டு, வருமான வரித்துறை அலுவலகத்தில் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.