2 ஜிபி இலவச டேட்டா திட்டம் தொடங்கியது..!

கல்லூரி மாணவர்களுக்கு தினமும் 2 ஜிபி இலவச டேட்டா வழங்கும் திட்டம் தலைமைச் செயலகத்தில் தொடங்கி வைத்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

ஏப்ரல் 2021 வரை எல்காட் நிறுவனம் மூலமாக இணையவழியில் கல்விகற்கும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு தினசரி 2ஜிபி டேட்டா இலவசமாக வழங்க தமிழக அரசு உத்தரவிட்டது.

அரசு, அரசு உதவி பெறும் கல்லூரிகள்,பாலிடெக்னிக் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு இலவச டேட்டா கார்டு வழங்கப்படவுள்ளது. இன்று இந்த திட்டத்தை முதல்வர் பழனிச்சாமி இன்று தலைமைச் செயலகத்தில் தொடங்கி வைத்துள்ளார். இந்த திட்டத்தின் மூலம் 9,69,047 மாணவர்கள் பலனடைய உள்ளனர்.