பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் வகையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது- நிர்மலா சீதாராமன்

2021-22 மத்திய நிதிநிலை அறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல்செய்கிறார். அப்போது பேசிய அவர் நம் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் வகையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

மேலும் இது தொடர்பாக ராகுல்காந்தி ட்வீட் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் பட்ஜெட்டில் சுகாதாரத் துறைக்கான செலவீனங்களை அதிகரிக்க வேண்டும் எனவும் வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில் இருக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.