இலவச கேஸ் சிலிண்டர் 8 கோடி மகளிருக்கு வழங்கப்படும்- நிர்மலா சீதாராமன்

மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்யப்பட்டது. நாட்டு மக்களுக்கு உதவுமா வகையில் இலவச கேஸ் சிலிண்டர் 8 கோடி மகளிருக்கு வழங்கப்படும் என பட்ஜெட் தாக்களில் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

மேலும் ரூ.64,180 கோடி மதிப்பில் பிரதமரின் சுயசார்பு ஆரோக்கிய திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.கொரோனா பாதிப்பால் சர்வதேச அளவில் பொருளாதார மந்தநிலை ஏற்பட்டது எனவே பொருளாதாரம் மீண்டெழுவதற்கு கொரோனா தடுப்பூசி உதவும் எனவும் தெரிவித்துள்ளார்.

ஆத்ம நிர்பார் பாரத் திட்டம் 5 மினி பட்ஜெட்களுக்கு இணையானது. கடந்த காலங்களில் இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள், தொழில் முன்னேற்றம், ஆரோக்கியம், உட்கட்டமைப்பு ஆகியவை சீராக நடந்துள்ளன.