புதுவையில் வாகனங்கள் இயங்கவில்லை !

puducherry updates : மீண்டும் பள்ளிகள் திறப்பு
puducherry updates : மீண்டும் பள்ளிகள் திறப்பு

மத்திய அரசின் புதிய வேளாண் திட்டங்களை திரும்பப் பெறக் கோரி பஞ்சாப், ஹரியானா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிங்களைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லியில் 9 மாதங்களுக்கு மேலாக தொடர் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.

இந்நிலையில், 3 வேளாண் சட்டங்களுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் கிடைத்த ஓராண்டு தினத்தை ஒட்டி நாடு முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடத்த விவசாயிகள் சங்கம் அழைப்புவிடுத்தன.

இதனை முன்னிட்டு , நாடு முழுவதும் இன்று காலை 6 மணி முதல் மாலை 4 மணி வரை பந்த் நடைபெறுகிறது.தற்போது புதுவையிலும் கடைகள் மூடப்பட்டு உள்ளன. மேலும் பேருந்துகள் ஆட்டோ, டெம்போ, உள்ளிட்ட வாகனங்களும் ஓடவில்லை.

மேலும் தனியார் பேருந்துகள் இயக்கப்படவில்லை.இதைப்போன்ற ஆந்திர மாநிலத்திலும் பேருந்துகள் இயங்கவில்லை.மேலும் தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : விவசாயிகளுக்கு ஆதரவாக நாடு தழுவிய பந்த் !