விவசாயிகளுக்கு ஆதரவாக நாடு தழுவிய பந்த் !

மத்திய அரசின் புதிய வேளாண் திட்டங்களை திரும்பப் பெறக் கோரி பஞ்சாப், ஹரியானா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிங்களைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லியில் தொடர் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.

இந்த போராட்டம் கடந்த 9 மாதங்களுக்கு மேலாக தொடர்ந்து நடந்துவருகிறது.நாடு முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடத்த விவசாயிகள் சங்கம் அழைப்புவிடுத்தன. இந்த பேராட்டம், நாடு முழுவதும் இன்று காலை 6 மணி முதல் மாலை 4 மணி வரை அனைத்து அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், கல்வி மற்றும் பிற நிறுவனங்கள், கடைகள், மற்றும் வணிக நிறுவனங்களை மூடுவதற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

பெரும்பாலான ஆட்டோ, டெம்போ ஓட்டுநர்களும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.மருந்து சேவைகள் மற்றும் அத்தியாவசிய இயங்கும் என்றும் அமைதியான முறையில் இந்த பந்த் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம் !