மூன்று நாட்களுக்கு பள்ளி விடுமுறை..!

சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்படாத நிலையில் ஒன்பதாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மட்டும் செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் பள்ளிகள் தொடங்கி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் வெகு விரைவில் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் பள்ளி திறந்த நாள் முதல் தமிழகத்தின் பல பகுதிகளில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் சிலருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வருகிறது என்பதும் இதனை அடுத்து அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் திருவாரூர் மாவட்டம் வீரபாண்டி அருகே உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் நான்கு பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து அந்த பள்ளிக்கு மூன்று நாட்களுக்கு விடுமுறை என முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: வடமாநில இளைஞர்கள் விற்பனை செய்யும் பானி பூரி மசாலாவில் புழு