முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு கரோனா தொற்று !

தமிழகத்தில் கரோனா தொற்றின் எண்ணிக்கை தீயாக பரவி வருகிறது.நாளுக்கு நாள் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.மேலும் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிர படுத்தப்பட்டுவருகிறது.

முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கரோனா தொற்று ஆரம்பித்த கால கட்டத்தில் தீவிரமாக செயல்பட்டு அதனை தடுக்க பல நடவடிக்கைகளை அறிவித்தார்.

சட்டமன்ற தேர்தலில் விராலிமலை தொகுதியில் போட்டியிட்ட விஜயபாஸ்கர் வெற்றி பெற்றார்.தற்போது தனக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அவர் குறிப்பிட்டுள்ளது, எனக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பரிசோதனைக்கு பிறகு என்னை நான் தனிமைப்படுத்தி கொண்டேன். என்னுடன் தொடர்பில் இருந்தவர்களும் பரிசோதனை எடுத்துக்கொள்ளுங்கள். கரோனா விதிமுறைகளை பின்பற்றி பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.