இமாச்சல பிரதேச முன்னாள் முதலமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான விர்பத்ரா சிங் இன்று காலமானார்.அவருக்கு வயது 87 .நீண்டகாலம் நோய்வாய்ப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
இந்நிலையில், சிம்லா நகரில் உள்ள இந்திரா காந்தி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அவருக்கு உடல்நல குறைவு ஏற்பட்டது.அவர் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை காலமானார்.
அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு, பின்பு அதில் இருந்து குணமடைந்து உள்ளார். எனினும், அதன்பின்பு நிம்மோனியாவால் அவர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
இவர் ஒன்பது முறை எம்.எல்.ஏ யாகவும் , ஐந்து முறை எம்.பி யாகவும் மேலும் இமாச்சல பிரதேச முதல்வராக ஆறு முறை பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.