இந்தியாவில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம் !

கொரோனா தொற்றின் பரவலை கட்டுப்படுத்த அரசு ஊரடங்கை அறிவித்துள்ளது.இந்த ஊரடங்கில் கொரோனா தொற்று நாள் பாதிப்பு குறைய தொடங்கியுள்ளது.

கடந்த 55 நாட்களாக தினசரி கரோனா தொற்று குறைந்து வந்த நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் முதல் முறையாக குறைந்த அளவில் அதிகரித்து, 45 ஆயிரத்து 892 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுவரை மொத்த பாதிப்பு 3 கோடியே 7 லட்சத்து 9 ஆயிரத்து 557 ஆக உள்ளது.கடந்த 24 மணி நேரத்தில் 18 லட்சத்து 93 ஆயிரத்து 800 பேருக்கு கரோனா மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.