அசாம் மாநில முன்னாள் முதல்வர் தருண் கோகாய் மரணம்

அசாம் மாநில காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் அம்மாநில முதல்வராக மூன்று முறை பதவி வகித்தவருமான தருண் கோகாய்( வயது 82) கடந்த ஆகஸ்ட் 25 ஆம் தேதி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார்.

அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்தநிலையில், அவரது உடல்நிலை கடந்த இருதினங்களுக்கு முன்னர் பின்னடைவைச் சந்தித்தது. அவருக்கு வெண்டிலேசன் உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவந்தது. இந்தநிலையில், சிகிச்சைப் பலனின்றி தருண் கோகாய் உயிரிழந்தார்.

காங்கிரஸின் மூத்த தலைவராக தருண் கோகாய், 6 முறை நாடாளுமன்ற உறுப்பினராகவும், 15 ஆண்டுகள் அசாம் மாநில முதல்வராகவும் இருந்துள்ளார்.