தமிழ் மக்களுக்கு நான் அடிமை – சசிகலா !

சசிகலா இன்று காலை பெங்களூருவில் இருந்து புறப்பட்டார். தமிழக எல்லைக்குள் வந்த பிறகு அதிமுக நிர்வாகியின் காரில் ஏறினார். இதனால் அதிமுக கொடி கட்டிய காரில் சசிகலா பயணிப்பதை அதிமுக அமைச்சர்களால் தடுக்க முடியாத நிலை ஏற்பட்டது.

மேலும் பயணத்தின்போது வாணியம்பாடி டோல்கேட்டில் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் பேசியது,பீனிக்ஸ் பறவை போல அதிமுக மீண்டு வந்திருக்கிறது. புரட்சித் தலைவி வழி வந்த ஒரு தாய் பிள்ளைகள் ஒற்றுமையோடு இணைந்து செயல்படுவதே என் விருப்பம் என்று கூறினார்.

மேலும் தொண்டர்களுக்கும், தமிழக மக்களுக்கும் நான் அடிமை; அடக்குமுறைக்கு நான் என்றும் அடிபணியமாட்டேன் என்றுபேசினார் சசிகலா.மேலும் அவர் தொடர்ந்து தீவிர அரசியலில் ஈடுபடுவேன் என்று கூறினார்.