ஸ்ரீவில்லிபுத்தூர் தீப்பெட்டி கிடங்கில் தீ விபத்து..!

ஸ்ரீவில்லிபுத்தூரில் தீப்பெட்டி கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமாகியுள்ளது. 5 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீப்பெட்டி கிடங்கில் பிடித்த தீயை தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள இனம்கரிசல்குளத்தை சேர்ந்தவர் கருப்பையா. இவருக்கு சொந்தமான தீப்பெட்டி தயாரிக்கும் தொழிற்சாலையில் உள்ள இரண்டு குடோனில் நேற்று இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த ஸ்ரீவில்லிபுத்தூர் தீயணைப்பு துறையினர் அந்தோணி, குருசாமி தலைமையில் ராஜபாளையம், தீயணைப்பு துறையினரும் இணைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

நள்ளிரவு வரை இந்த பணி தொடர்ந்து நடைபெற்றது. இதுகுறித்து வன்னியம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.