சதாப்தி எக்ஸ்பிரஸில் திடீர் தீவிபத்து !

டெல்லியில் இருந்து டேராடூனுக்கும் செல்லும் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில் ஹரித்வார் அருகே கன்ஸ்ரோ நிலையம் அருகே தீப்பிடித்தது. ரயிலின் சி -4 கம்பார்ட்மென்ட் ஜன்னல்களிலிருந்து அதிக தீப்பிழம்புகள் எழுந்தன .

ரெய்வாலா மற்றும் கன்ஸ்ரோ ரயில்வே தொகுதிகளில் மதியம் 12 மணிக்குப் பிறகு இந்த விபத்து நிகழ்ந்ததாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த விபத்தில் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை.

தீ விபத்து ஏற்பட்ட பெட்டியில் மொத்தம் 35 பயணிகள் இருந்துள்ளனர். அவர்கள் அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். தீவிபத்து குறித்து விரிவான விசாரணை மேற்கொள்ளப்படும் என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.