பண்டிகை காலத்தை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் சேவை நீட்டிப்பு !

கரோனா தொற்று பரவல் காரணமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்ட பின் வழக்கமாக இயக்கப்படும் ரயில்களுக்குப் பதிலாக குறிப்பிட்ட வழித்தடங்களில் சிறப்பு ரயில்கள் மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன. மக்கள் அதிகம் சென்று வரும் பல்வேறு வழித்தடங்களில் இந்த பண்டிகைகால சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டுகின்றன.

தென்னக ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில் 4 தினசரி சிறப்பு ரயில்கள், 4 வாரத்திற்கு இருமுறை இயக்கப்படும் சிறப்பு ரயில்கள் மற்றும் 12 வாராந்திர சிறப்பு ரயில்கள் என மொத்தம் 20 பண்டிகை கால சிறப்பு ரயில் சேவைகள் நீட்டிக்கப்பட்டுள்ளது .

அதன்படி தினசரி சிறப்பு ரயில்களில், கொச்சுவெலி- மைசூரு சிறப்பு ரயில் 2021ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.மைசூரூ- கொச்சுவெலி சிறப்பு ரயில் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 1ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

மங்களூரு- லோகமனிய திலக் சிறப்பு ரயில் அடுத்த ஆண்டு ஜனவரி 31ஆம் தேதி வரையும், மறு மார்க்கத்தில் பிப்ரவரி 1ஆம் தேதி வரையும் நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வாரம் இருமுறை இயக்கப்படும் ரயில்களில், நாகர்கோவில் – மும்பை சிறப்பு ரயில் ஜனவரி 1ஆம் தேதி வரையும், மும்பை- நாகர்கோவில் ரயில் பிப்ரவரி 1 ஆம் தேதி வரையும் நீட்டிக்கப்பட்டு, தலா 9 ரயில்கள் கூடுதலாக இயக்கப்படவுள்ளன.

திருநெல்வேலி தாதர் சிறப்பு ரயில் சேவை ஜனவரி 27ஆம் தேதி வரையும், மறு வழயில் ஜனவரி 28ஆம் தேதி வரையும் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதேபோல், காந்திதம்- திருநெல்வேலி கூடுதல் கட்டண சிறப்பு ரயில் சேவை ஜனவரி 28 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.