பிரிட்டனிலிருந்து கர்நாடகா வந்த பயணிகளுக்கு கரோனா !

பிரிட்டனில் உருமாறிய கரோனா வைரசின் தாக்கம் அதிகரிப்பதைத் தொடர்ந்து இந்திய அரசு பல்வேறு கட்ட தடுப்பு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. மேலும் பிரிட்டனிலிருந்து இந்தியா வரும் விமானங்கள் ரத்துசெய்யப்பட்டு, அங்கிருந்து இந்தியா திரும்பியவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் பிரிட்டனிலிருந்து கர்நாடக மாநிலத்திற்குத் திரும்பிய பயணிகளில் பத்து பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத் துறை அமைச்சர் கே. சுதாகர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய அவர், “கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டவர்களின் மாதிரிகள் அனைத்தும் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளன. இந்தப் பரிசோதனைகளின் முடிவுகளுக்கு இரண்டு முதல் மூன்று நாள்கள் தேவைப்படும். அந்த முடிவுகள் வெளியான பிறகே, அவை உருமாறிய வைரசா எனக் கண்டறிய முடியும்.