நாடு முழுவதும் வேளாண் சட்டத்தை திரும்ப பெற கோரி விவசாயிகள் ரயில் மறியல் போராட்டம் !

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டத்தை திரும்ப பெற கோரி நாடு முழுவதும் இன்று ரயில் மறியல் போராட்டத்தில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர் . இன்று பகல் 12 மணி முதல் 4 மணி வரை ரயில் மறியல் போராட்டம் நடைபெறும் என்று தெரிவிக்கபட்டுள்ளது.

பஞ்சாப், டெல்லி, ஹரியானா, உத்தரபிரதேசம் உட்பட பல்வேறு ரயில் நிலையங்களில் போராட்டம் தீவிரமாக நடைபெற்று வருகிறது.நாடு முழுவதும் உள்ள முக்கிய ரயில் நிலையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

தண்டவாளத்தில் குவிந்த விவசாயிகள் மத்திய அரசு மற்றும் வேளாண் சட்டங்களை திரும்பப்பெற கோரியும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.மேலும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல் துறையினர் கைது செய்து வருகின்றனர்.