அடுத்த 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு – தமிழகம் !

தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,வளிமண்டலத்தில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தென் தமிழக கடலோர மாவட்டங்கள்,டெல்டா மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சிமலை ஒட்டிய மாவட்டங்கள் மிதமான மழை பெய்யக்கூடும்.

நாளை இலங்கை ஒட்டி நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக கடலோர மாவட்டங்கள் மேலும் காரைக்கால்,புதுவையில் பகுதிகளில் மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.