முர்ஷிதாபாத்தில் மேற்கு வங்க அமைச்சர் ஜாகிர் ஹுசேன் மீது தாக்குதல் !

மேற்கு வங்க தொழிலாளர் னால துறை அமைச்சர் ஜாகிர் ஹுசேன் கொல்கத்தா செல்ல முர்ஷிதாபாத் மாவட்டத்தின் ஜாங்கிபூர் நகரில் உள்ள நிம்திதா ரயில் நிலையத்திற்கு காத்திருந்த பொது அடையாளம் தெரியாத நபர்கள் அமைச்சர் ஜாகிர் ஹுசேன் மீது குண்டுகளை வீசி நக்குதல் நடத்தினர்.

இந்த தாக்குதலில் ஜாகிர் ஹுசேன் மற்றும் அவரது மருமகன் மேலும் சில பயணிகளும் காயமடைந்தனர்.இந்த காட்சிகள் அங்கிருந்த கேமராக்களில் பதிவாகி உள்ளன.

இந்த தாக்குதலில் அமைச்சர் காலில் பலத்த காயம் ஏற்பட்டது, மேலும் அவருடன் இருந்த மற்ற இரண்டு நபர்களும் காயமடைந்தனர்.மேலும் சிகிச்சைக்காக அமைச்சர் கொல்கத்தாவுக்கு கொண்டு செல்லப்படுவதாக தகவல்கள் வெளியாகின.