தென் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு !

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியீட்டுள்ள தகவலில்,வருகின்ற மார்ச் 6 ஆம் தேதி முதல் 3 நாட்களுக்கு தென் தமிழக மாவட்டங்களில் லேசான மற்றும் மிதமான மழை பெய்யக்கூடும் என்று எதிர்பாக்கப்படுகிறது.

புதுவையில் வறண்ட வானிலை இருக்கும் என்றும் கூறப்படுகிறது.சென்னையில் 2 நாட்களுக்கு வானம் மேகமூட்டம் இன்றி காணப்படும் .

அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23 செல்சியஸ் இருக்கும் என்று கூறப்படுகிறது.