இங்கிலாந்தில் நண்பர்களுக்காக ரூ. 2 லட்சம் செலவு செய்து திருமணம் முடித்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
தற்போது நிலவிவரும் ஊரடங்கு காரணமாக பல்வேறு நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டு வருகின்றன. கொரோனா அதிகம் பரவும் என்பதால் உலக நாடுகள் இந்த உத்தரவை பிறப்பித்து வருகின்றன.
இந்நிலையில் இங்கிலாந்தில் வினோத திருமணம் நடந்துள்ளது அதாவது கொரோனா காரணமாக நண்பர்கள் யாரும் வராததால் இங்கிலாந்தை சேர்ந்த ரோமானி மற்றும் சாம் ரோண்டியோ என்ற இருவரும் திருமணம் செய்ய முடிவு செய்து அதன்படி தங்களது திருமணத்திற்கு நண்பர்களின் கட்டவுட்களை வைத்து அதன் முன்னிலையில் திருமணத்தை நடத்தினர். இதற்காக அந்த ஜோடி ரூ.2லட்சத்தை செலவு செய்துள்ளனர்.தற்போது இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது