காங்கோ நாட்டில் தங்க சுரங்கத்தில் மண் சரிந்து விழுந்ததில் 50 தொழிலாளர்கள் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
காங்கோ நாட்டின் கிழக்குப் பகுதியில் உள்ள கமிட்டுங்கா அருகே தங்க சுரங்கம் உள்ளது.இங்கு தொழிலாளர்கள் பலர் பணியாற்றி வருகிறார்கள். இந்த நிலையில் அப்பகுதியில் பெய்த பலத்த மழையால் தங்க சுரங்கத்தில் மண்சரிவு ஏற்பட்டது தொழிலாளர்கள் பலர் சிக்கி கொண்டனர்.
அவர்களில் 50 தொழிலாளர்கள் உயிரிழந்ததாக தன்னார்வ தொண்டு நிறுவனம் தெரிவித்துள்ளது. இது குறித்து பேசிய அதிகாரிகள் கூறுகையில், தங்க சுரங்கம் இடிந்ததால் சுமார் 50 பேர் உயிரிழந்ததாக கூறியுள்ளனர்.