எலன் மஸ்க் கொடுக்கும் பரிசை யார் வெல்லப்போகிறார் !

இந்தியாவில் தற்போது கால்பதித்த மற்றும் உலகின் பணக்கார தொழிலதிபர்களில் ஒருவரான எலன் மஸ்க், வளிமண்டலத்தில் அதிகரித்து வரும் கார்பன் டை ஆக்சைடு மற்றும் கார்பன் வெளியேற்றத்திற்கான தீர்வுகளைக் காண முனைந்துள்ளார். இதற்கான பணிகளில் அவர் ஈடுபட்டுள்ளார்.

இதற்கு சரியான தீர்வை அளிக்கக்கூடிய மிகச்சிறந்த தொழில்நுட்பத்தை உருவாக்கும் நபருக்கு 730 கோடி ரூபாய் பரிசாக வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

இதை தான் அதிகாரப்பூர்வ ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.சிறந்த கார்பன் பிடிப்பு தொழில்நுட்பத்தை உருவாக்குபவருக்கு 100 மில்லியன் டாலர் பரிசு வழங்கப்போகிறேன் என்று கூறியுள்ளார் .மேலும் இது குறித்த முழுமையான தகவல்களை அடுத்த வாரம் தருவதாக குறிப்பிட்டுள்ளார்.