எரியும் டயரை யானை மீது வீசிய நபர்கள் !

நீலகிரி மாவட்டத்தில் உள்ள மசினகுடி என்னும் பகுதியில் காதில் தீக்காயத்துடன் சுற்றித்திரிந்த ஆண் யானைக்கு சிகிச்சை அளிப்பதற்காக கடந்த 19ம் தேதி மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது. ஆனால், லாரியில் ஏற்றப்பட்டு முதுமலை முகாமுக்கு கொண்டுச் செல்லும் வழியில் காட்டு யானை பரிதாபமாக உயிரிழந்தது. இதனையடுத்து, யானையின் உடலுக்கு நேற்று உடற்கூராய்வு செய்யப்பட்டது.

யானையின் காது பகுதியில் தீ காயம் இருந்தது.மேலும் அந்த காயத்தால் யானையின் காதில் உள்ள நரம்புகள் அறுபட்டு அதிலிருந்து ரத்தம் வெளியேறியது கண்டறியப்பட்டுள்ளது.

இந்நிலையில் வனத்துறையினர் சிறப்பு குழு அமைத்து விசாரணை செய்ததன் முடிவில் ஊருக்குள் உணவு தேடி வந்த காட்டு யானை மீது, இருசக்கர வாகனத்தின் டயரில் தீ வைத்து யானை மீது வீசியது தெரியவந்தது. விசாரணை முடிவில் இருவர் கைது செய்யப்பட்டனர்.பின்னர்,அவர்கள் இருவரிடமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.