தேர்தல் பிரச்சாரத்திற்காக ராகுல்காந்தி திருப்பூர் வருகை..!

தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி இன்று திருப்பூர் வருகிறார்.

ராகுல்காந்தி திருப்பூர் வருவதையொட்டி திருப்பூர் குமரன் நினைவிடம் சுத்தம் செய்யப்பட்டது. கலந்துரையாடல் கூட்டம் நடைபெறும் ராமசாமி முத்தம்மாள் திருமண மண்டபத்தில் நேற்று காலை மத்திய பாதுகாப்பு படை போலீஸ் துணை கமாண்டன்ட் கணேஷ் பிரதாப் சிங் தலைமையிலான குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.

கூட்டம் நடக்கும் மேடை, வரும் பாதை உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தனர். மத்திய உளவுப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு ஹரிசார் ஆண்டனி உடன் இருந்தார். ராகுல்காந்தி வரும்போது 16 பேர் கொண்ட மத்திய பாதுகாப்பு படையினர் அவருடன் இருந்து பாதுகாப்பு பணியை மேற்கொள்கிறார்கள். இதுதவிர திருப்பூர் மாநகர காவல்துறை சார்பிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்படுகிறது.