கரூர் ஆட்சியர் மற்றும் எஸ்பி மாற்றம் – தேர்தல் ஆணையம் !

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் தேர்தல் அலுவலகர்களாக செயல்பட்ட ஒரு சில மாவட்ட ஆட்சியர்களை தேர்தல் ஆணையம் இடமாற்றம் செய்து வருகிறது.

கோவை, திருச்சி ஆட்சியர்கள் தேர்தல் அல்லாத பணிகளில் பணியமர்த்தி சமீபத்தில் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. அதே போல கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர், ஐஜி தினகரன் ஆகியோரை மாற்றம் செய்ய உத்தரவிட்டது.

அந்த வகையில் கரூர் மாவட்டர் ஆட்சியர் மலர்விழி மற்றும் காவல் கண்காணிப்பாளர் மகேஸ்வரன் ஆகியோரை தேர்தல் அல்லாத பணிக்கு மாற்றி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.தற்போது கரூர் ஆட்சியர் பிரசாந்த் வடநேரே, கரூர் எஸ்பியாக சஷாங் சாய் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.