மோடி மீனாட்சியம்மன் கோவிலில் சுவாமி தரிசனம்!

உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் பிரதமர் மோடி முதல் முறையாக சுவாமி தரிசனம் செய்தார்.

கிழக்கு கோபுரம் அருகே உள்ள அம்மன் சன்னதி வழியாக உள்ளே சென்ற  பிரதமர் மோடிக்கு கோவில் நிர்வாகம் சார்பாக பூரண கும்ப மரியாதை செய்யப்பட்டது.

மாலை 7 மணி முதல் 4 கோபுர வாசல் வழியாக பக்தர்கள் அனுமதி நிறுத்தம் செய்யப்பட்டது.

முன்னதாக மேற்குவங்கத்தில் இருந்து தனி விமானத்தில் மதுரை விமான நிலையம் வந்தடைந்தார் பிரதமர் மோடி. அங்கிருந்து கார் மூலம் மீனாட்சி அம்மன் கோவில் வந்தடைந்தார். பிரதமரின் வருகையை அடுத்து மதுரை முழுவதும் சுமார் 3,000 போலீசார் காவல் பணியில் ஈடுபட்டுள்ளனர்