முடிந்தது தேர்தல் பிரச்சாரங்கள் – தமிழகம் !

தமிழகத்தில் நாளை மறுநாள் ஏப்ரல் 6 ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது.தமிழகம், கேரளா மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் 6 ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டமன்றத் தேர்தல்கள் நடக்கவுள்ளன. தமிழகத்தில் இன்று இரவு 7 மணியுடன் தேர்தல் பரப்புரை நிறைவடைந்தது.

தமிழகத்தில் அதிமுக-பாஜக கூட்டணியும், திமுக-காங்கிரஸ் கூட்டணியும் முக்கிய இரு தரப்புகளாக பார்க்கப்படுகின்றன.வாக்குப்பதிவு முடியும் நேரத்துக்கு 48 மணி நேரத்துக்கு முன் தேர்தல் பரப்புரை முடியவேண்டும் என்பது இந்தியாவின் மக்கள் பிரதிநிதித்துவ சட்ட விதியாகும்.

அதன்படி இன்று, ஏப்ரல் 4ஆம் தேதி, இரவு 7 மணிக்கு பரப்புரை முடிந்தது.இதன்போது பிரசார ஊர்வலங்கள் மற்றும் பொதுக் கூட்டங்கள் நடத்துவது தேர்தல் விதிமீறல் ஆகும்.