தமிழகத்தில் நாளை தேர்தல் நடைபெற உள்ளது.இந்நிலையில்,அணைத்து கட்சி பிரச்சாரங்கள் எல்லாம் நேற்று இரவு 7 மணியுடன் நிறைவடைந்தது.மேலும் அரசியல் காட்சிகள் பணப்பட்டுவாடா நடத்தினால் புகார் அளிக்குமாறு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இந்நிலையில் வாக்குப்பதிவு நாளான நாளை 80 வயதிற்கு மேற்பட்டவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வீட்டில் இருந்து வாக்குச்சாவடிக்கு காரில் சென்று திரும்ப தேர்தல் ஆணையதுடன் இணைந்து உபர் நிறுவனம் சலுகை ஒன்றை அறிவித்துள்ளது.
இந்த சேவை சென்னை,திருச்சி ,கோவை ஆகிய நகரங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.உபர் செயலி மூலம் முன்பதிவு செய்து இந்த இலவச சேவையை பயன்படுத்திக்கொள்ளலாம்.