உதயநிதி ஸ்டாலின் பெண்களை அவதூறாக பேசுவதாக சாடியுள்ளார் – முதல்வர் பழனிசாமி !

தமிழக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரில் தேர்தல் பரப்புரையில் திமுக ஒரு கட்சியே அல்ல கம்பெனி என கூறியுள்ளார்.பெண்கள் குறித்து அவதூறாக பேசிய திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினை திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கண்டிக்க தவறியது ஏன் என்றும் கேள்வி எழுப்பி உள்ளார்.

திமுக முன்னாள் தலைவர் கருணாநிதி தனது குடும்பத்தினருக்கு பதவி பெறுவதற்காக மட்டுமே டெல்லி சென்று வந்ததாக கூறியுள்ளார் . அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ் மீது களங்கம் ஏற்படுத்தும் வகையில் ஸ்டாலின் பேசி வருவதை ஏற்க முடியாது எனவும் முதலமைச்சர் எச்சரித்துள்ளார்.