இன்று காலை நேபாளத்தில் நிலநடுக்கம் !

நேபாளத்தில் இன்று அதிகாலை 5.42 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. நேபாளத்தின் காத்மாண்டு மாநிலைத்தில் உள்ள லம்ஜங் மாவட்டம் ஹல்ப்ஹலி என்ற பகுதியை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக ஐரோப்பிய-மத்தியதரைக்கடல் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதேபோல், நேபாளத்தின் போக்ஹரா பகுதியில் இருந்து கிழக்கே 35 கிலோமீட்டர் தூரத்தை மையமாக கொண்டு நேற்று இரவு 11.57 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

ரிக்டர் அளவில் 5.3 ஆக அந்த நிலநடுக்கம் பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.