தமிழகத்தில் கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.தற்போது 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.இந்நிலையில் மத்திய மற்றும் மாநில அரசுகளும் தடுப்பூசி போட்டுக்கொள்ள அறிவுறுத்துகின்றனர்.
தமிழகத்தில் 18 வயது முதல் 45 வயதுக்கு உட்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி நாளை தொடங்க இருப்பதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
மேலும், 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடும் பணிகளை வியாழக்கிழமை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.