சேலம், ஈரோடு மற்றும் கோவை மாவட்டங்களில் முதலமைச்சர் நாளை ஆய்வு

கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் சேலம், ஈரோடு மற்றும் கோவை ஆகிய மாவட்டங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை ஆய்வு மேற்கொள்கிறார்.

இந்த மூன்று மாவட்டங்களுக்கும் செல்லும் முதலமைச்சர் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொள்கிறார். அத்துடன், மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் சுகாதார துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.

ஏற்கனவே, அமைச்சர்கள், எம்எல்ஏ-க்கள் அவரவர் தொகுதிக்கு சென்று கொரோனா தடுப்பு பணிகளை ஈடுபட அறிவுறுத்தியிருந்தார். இந்நிலையில், முதலமைச்சரும் மாவட்ட வாரியாக ஆய்வுப் பணியை தொடங்குகிறார்.