மழை காரணமாக 2 நாட்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை !

கனமழைக்கு வாய்ப்பு
கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது.வங்கக் கடலில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தில் கனமழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு 2 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை பல இடங்களில் 10 செ.மீக்கு மேல் மழை பதிவாகியுள்ளது.கனமழையால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு 2 நாட்கள் விடுமுறை விடுக்கப்பட்டுள்ளது.